ஒரு ஏரியாவில் தெரு விளக்குகள் சில தினக்களாக எரியாமல் இருக்கிறது. இதனால் ஒருவர் தினமும் மின்சார வாரியத்திற்கு தொலைபேசியில் புகார் சொல்கிறார். சில தினங்கள் விடா முயற்சிக்கு பின்பு மின்வாரிய ஊழியர் வந்து தெருவிளக்கை சரி செய்துவிட்டு , அருகில் உள்ள ஒரு கடையில் உள்ள தொலை பேசியை பயன்படுத்தி அவர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கிறார். பேசிவிட்டு பணம் கொடுக்கிறார்.அப்போது அந்த கடையில் இருப்பவர் இந்த ஊழியருக்கு நன்றி தெரிவிக்கிறார். பணம் வாங்கவும் மறுக்கிறார். அதற்கு அந்த ஊழியர் தனக்கு நன்றி எதற்கு.. தினமும் தொலைபேசியில் புகார் சொன்னவருக்கு சொல்லுங்க என்றும் இது என் பணமல்ல அரசாங்க பணம் தான் என்றும் சொல்லி பணத்தை அந்த கடையின் பலகை மீது வைக்கிறார். அதற்கு அந்த கடைக்காரர் தொலைபேசியில் பேசியது தான் தான் என்று சொல்லி அந்த ஊழியர் வைத்த நாணயத்தை எடுக்க தேடுகிறார். அப்போது தான் அந்த ஊழியர் கடைக்காரரிடம் கேட்கிறார். உங்களால் பார்க்க முடியாதா என்று. கடைக்காரர் சிரித்துக் கொண்டே ஆமாம் என்று சொல்லி நாணயத்தை தேடுகிறார்.
ஊழியர் : ஆனா நீங்க தினமும் எங்களை அழைச்சிங்களே..
கடைக்காரர் : ஏன்னா... இருளின் வலி எனக்கு நல்லாவே தெரியும்.
....முற்றும்.... So Touching yaar.. :)
ஊழியர் : ஆனா நீங்க தினமும் எங்களை அழைச்சிங்களே..
கடைக்காரர் : ஏன்னா... இருளின் வலி எனக்கு நல்லாவே தெரியும்.
....முற்றும்.... So Touching yaar.. :)